செவ்வாய், 13 அக்டோபர், 2015

என் பூங்காவில் பூப்பதெல்லாம் தமிழாகும் அமுத தமிழே அழகு தமிழே இளமை பூக்கும் இனிமைத் தமிழே பாவலன் நெஞ்சினில் சுரந்திடும் தமிழே பாமரன் மனதில் படர்ந்திடும் பண்புத் தமிழே அன்பை பறைசாற்றும் அன்னைத் தமிழே எந்நாளும் உணர்வில் கலந்த என்னுயிர்த் தமிழே